நாகையில் குடிக்க பணம் தராததால் சகோதரியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சகோதரன்
Feb 16 2020 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் சீர்காழி அருகே, மது குடிக்க பணம் தராததால், ஆத்திரத்தில் சகோதரி மீது பெட்ரோல் ஊற்ற முயற்சித்தவர் மீதே, தீப்பற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. புத்தூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர், சீர்காழியில் உள்ள சகோதரி வீட்டாரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது, குடிக்க பணம் கேட்டு சகோதரி மஞ்சுளாவிடம் தகராறு செய்துள்ளார். மஞ்சுளா பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மகேஷ், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மஞ்சுளா மீது ஊற்ற முயன்றுள்ளார். அதனை அருகில் இருந்த தமிழரசன் என்பவர் தடுத்துள்ளார். அப்போது தமிழரசன் மற்றும் மகேஷ் மீது பெட்ரோல் தவறி ஊற்றியுள்ளது. ஆத்திரத்தில் இருந்த மகேஷ் தீ வைத்ததில், அவர் மீதும், தமிழரசன் மீதும் தீப்பற்றியது. காயங்களுடன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.