குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டம் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
Feb 20 2020 2:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராவும், தமிழக சட்டப்பேரவையில் இதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தியும், பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேகம்பூரில் உள்ள ஒரு மைதானத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாலைமுதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் அங்கேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்த அவர்கள், இன்று இரண்டாம் நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு, பல்வேறு தரப்பினரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதே கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் புலிகள் அமைப்பு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.