இரவுக்காவலர், உதவியாளர் பணிக்கு எம்.பி.ஏ., பி.இ., இளைஞர்கள்- 4 பணியிடங்களுக்கு ஆயிரம் பேர் குவிந்த அவலம்
Feb 20 2020 9:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில், இரவுக்காவலர், அலுவலக உதவியாளர் உட்பட 4 காலிப்பணியிடங்களுக்காக எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பி.இ. படித்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரே நேரத்தில் குவிந்த சம்பவம், தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில், மூன்று இரவுக்காவலர் பணியிடங்களும், ஒரு உதவியாளர் பணியிடத்தையும் நிரப்புவது குறித்த அறிவிப்பு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.இ. படித்த ஆயிரத்து 437 பட்டதாரிகள், காலைமுதல் நீண்ட நேரமாக காத்திருந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். 800-க்கும் மேற்பட்ட பெண் பட்டதாரிகளும், குழந்தைகளுடன் சில தாய்மார்களும் கலந்துகொண்டனர்.