தாறுமாறாக ஏறும் தங்கத்தின் விலை - பழைய விலையை கூறி ஆதங்கப்படும் மூத்த குடிமக்கள்
Feb 22 2020 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து, 32,500 ரூபாயைத் தாண்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை, இன்று, வரலாறு காணாத வகையில், ஒரு சவரன், 32,500 ரூபாயை தாண்டியுள்ளது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து, சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 4,072 ரூபாய்க்கும், ஒரு சவரன் 32,576 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 34,208 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 52 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ 52,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள நடுத்தர மக்கள், தங்கம் வாங்குவதென்பது கனவாகிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெயா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மூத்த குடிமக்கள், தங்க விலை ஏற்றத்தை அரசு கட்டுபடுத்த வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.