சென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் கடைகளுக்கு சீல் : வரி மற்றும் வாடகை பாக்கியால் நடவடிக்கை
Feb 22 2020 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மாநகராட்சி வணிக வளாகங்களில் தொழில் வரி மற்றும் வாடகை பாக்கி வைத்த கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை புதுப்பேட்டை, சிந்தாதிரிபேட்டை, வாலாஸ் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி வளாகங்களில் உள்ள சில கடைகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக 37 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும், மேலும் வடைகையை வசூலிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளை அலைக்கழித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி வருவாய் அலுவலர் திரு.திருபால் தெரிவித்தார். வாடகை பாக்கியை செலுத்திவிட்டால் சீல் அகற்றப்படும் என்றும் அவர் கூறினார்.