அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் : கழக பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என தீர்மானம்
Feb 23 2020 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நடைபெறவுள்ள மாண்புமிகு அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்பது குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், பல்வேறு இடங்களில் ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்றன.
தூத்துக்குடி மாவட்ட அ.ம.மு.க சிறுபான்மை பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் திரு.எட்வீன் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கங்கைகொண்டானில், நாளை நடைபெறும் மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்தும், பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக கழகத்தினர் கலந்துகொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கடலூர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பாக ஆலோசனை கூட்டம் வடலூரில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.வி.எம்.சூரியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அம்மாவின் 72-ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்றும், நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு திரளாக பங்கேற்பது என்றும், மார்ச் மாதம் எட்டாம் தேதி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக வடலூரில் நடைபெறும் கழக செயல் வீரர்கள் கூட்டத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவிதினகரனுக்கு சிறப்பாக வரவேற்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு.மாரே கவுடு, ஓசூர் ராயக்கோட்டை சந்திப்பில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என நிரிவாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.