வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி பொய்யான தகவலை கூறிவரும் மத்திய அரசுக்கு கண்டனம் - அடுத்த மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு
Feb 23 2020 1:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த 2018-19ம் ஆண்டு 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகள் லாபம் ஈட்டிய நிலையில், வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக பொய்யான தகவலை கூறி வரும் மத்திய அரசைக் கண்டித்து அடுத்த மாதத்தில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காவிட்டால், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.