புற்றுநோய் குறித்து ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம் - சென்னையில் விழிப்புணர்வு பேரணி
Feb 23 2020 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சென்னை பெசன்ட்நகர் கடற்கரை சாலையில் நடைபெற்ற பேரணியை காவல்துறை துணை ஆணையர் திரு.பகலவன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்று, புற்றுநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.பிரபு, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும் என தெரிவித்தார்.