சென்னை அனகாபுத்தூர் பகுதியில் சாலை, குடிநீர் வசதி இல்லாததால் பெரும் அவதி : கடிதம் அனுப்பியும் அமைச்சர் நேரில் பார்வையிடவில்லை என புகார்
Feb 23 2020 6:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.