சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Feb 23 2020 6:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் IWMA அமைப்பு சார்பில் நிறுவப்பட்டுள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், அதுகுறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாட்டர் பாட்டில்களை மறுசுழற்சி செய்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல், தொழிற்சாலைகள் கழிவு மேலாண்மை சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.