மதுரையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ரவுடி கொலை : தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த நண்பர்
Feb 24 2020 2:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில், ரவுடியின் தலையை துண்டித்து கொண்டு வந்து காவல் நிலையத்தில் சரணடைந்த வாலிபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் பகுதியைச் சேர்ந்த ரவுடியான முத்துவேல் தனது நண்பர்களுடன் இணைந்து சுகாதார வளாகம் அருகே மது அருந்தியுள்ளார். அப்போது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முத்துவேலை அவரது நண்பர் நாகராஜ், தனது நண்பர்கள் உதவியுடன் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பின்னர், தலையை கையில் எடுத்துகொண்டு வந்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார். அவரது வாக்கு மூலத்தை கொண்டு கொலை நடந்த சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் போலீசார் ரவுடி முத்துவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட முத்துவேல் மீது மதுரை, சிவகங்கை உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.