வரும் ஒன்றாம் தேதி முதல் விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Feb 26 2020 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விழுப்புரம் முதல் திருவாரூர் வரையிலான அகல ரயில்பாதையை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், மின்இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில் சோதனை ஓட்டம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இந்த மார்க்கத்தில் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல், மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் முதல்கட்டமாக 6 ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.