மயிலாடுதுறை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
Feb 27 2020 9:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நல்லடை கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை வீரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் உண்டியல் வயல் ஒன்றில் கிடந்ததைக் கண்டித்து அப்பகுதி விவசாயி கொடுத்த தகவலை அடுத்து, கோயிலுக்கு வந்து பொதுமக்கள் பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் மற்றும் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு, உண்டியலை வயலில் வீசிவிட்டு மர்மநபர்கள் தப்பியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.