நீட் முறைகேடு - சி.பி.எஸ்.இ. அதிகாரிகளுக்கு சம்மன் : 2018ல் நீட் தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் ஆஜராக சம்மன்
Feb 28 2020 10:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.எஸ்.இ. அதிகாரிகளுக்கு தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு, நீட் தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதி,
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.