வேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த மாணவன்
Mar 17 2020 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூரில், கொரோனா வைரஸ் அழிக்கும் சூத்திரத்தைக் கண்டுப்பிடித்த 9 வகுப்பு மாணவன், அதனை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தான். ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த கோபி என்ற மாணவன், வைரஸ் ஏற்பட்டால் அதை எப்படி அழிக்கலாம் என்பது குறித்து ஒரு ஆய்வு கட்டுரை தயாரித்துள்ளான். அதனை மாவட்ட ஆட்சியர் திரு. சண்முகசுந்தரத்திடம் வழங்கியதுடன், அந்த ஆய்வறிக்கை குறித்து மாணவன் விளக்கமாக எடுத்துரைத்தான். அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், மாநில சுகாதார துறைக்கு அனுப்பிவைப்பதாக மாணவனிடம் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணவன் கோபி, தாம் சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் படி செயல்பட்டால், கொரோனாவை அழிக்க முடியும் என தெரிவித்தான்.