பல்லாங்குழி, தாயம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் ஊரடங்கு -வீடுகளில் ஒன்றுகூடி பொழுதை கழிக்கும் பொதுமக்கள்
Mar 31 2020 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள், பல்லாங்குழி, தாயம் ஆடுதல் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கதை சொல்லுதல் போன்ற பாரம்பரிய நிகழ்வுகள் மூலம் பொழுதை கழித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக 144 ஊடரங்கு உத்தரவு அறிவித்துள்ள நிலையில், திருப்பூர் அருகே மண்னரை பகுதியில், மறந்துபோன பழைய கலாச்சார விளையாட்டுகளான பல்லாங்குழி, பரமபதம், தாயம் ஆடுதல் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்லுதல் போன்றவற்றில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குழந்தைகளிடத்தில் பாட்டுக்கு நடனமாட சொல்லியும், திரைப்பாடல் புதிர் விளையாட்டுகளிலும் ஈடுபட்டு பொழுதை கழிக்கின்றனர்.
வீடுகளைவிட்டு வெளியே வராமல், குடும்ப உறுப்பினர்களுடன் பாசத்துடன் பேசி மகிழ்ந்தும் பழைய நினைவுகளை அசைபோட்டும் வருவதாக பலரும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.