நீலகிரி மாவட்டதில் 144 தடை உத்தரவால் மூடப்பட்டுள்ள 125 தேயிலை தொழிற்சாலைகள் இன்று முதல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தகவல்
Mar 31 2020 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டதில் 144 தடை உத்தரவால் மூடப்பட்டுள்ள 125 தேயிலை தொழிற்சாலைகள் இன்று முதல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விளங்கும் தேயிலை விவசாயத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 125 தேயிலை தொழிற்சாலைகள் மூலம் தேயிலை தூள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ்தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவால் மாவட்டத்தில் உள்ள 125 தேயிலை தொழிற்சாலைகள் மூடபட்டன. இதனால் தேயிலை விவசாயம் பாதிக்கட்டது. இந்நிலையில், தமிழக அரசு தேயிலை உற்பத்தியை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கபட்டுள்ளதால், ஒரு சில நிபந்தனைகளுடன் இன்று 125 தேயிலை தொழிற்சாலைகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.