ஈரோட்டில் கூடுதலாக 40 பேர் கொரனோ கண்காணிப்பில் பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதி
Mar 31 2020 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோட்டில் கூடுதலாக 40 பேர் கொரனோ கண்காணிப்பில் பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் ஏற்கனவே 80 பேர் கொரோனா அறிகுறியுடன் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், தற்போது, கூடுதலாக 40 பேர் பெருந்துறை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், இந்த மையத்தில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக உள்ளது. இவர்களில் கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்ட 20 பேர், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எஞ்சிய 100 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் கொரனோ உறுதியான நபர்கள் வசித்த பகுதிகளில் நேற்று வரை 16 ஆயிரத்து 546 குடும்பங்களைச் சேர்ந்த 57 ஆயித்து 734 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதை ரெட் சோனாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தவிர கூடுதலாக மோசிகீரனார் வீதி, மரப்பாலம் உள்ளிட்ட 3 பகுதிகள் தற்போது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த வீடுகளுக்கும் நோட்டீஸ் ஒட்டப்படுவதோடு, வீட்டில் உள்ளவர்களின் கைகளில் சீல் வைக்கப்படுகின்றன. தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை வஜ்ரா வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் கடந்த 21-ம் தேதி டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களையும் அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.