சுடர் ஏற்றும் நிகழ்வின்போது அத்தியாவசிய மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் - தமிழக அரசு அறிவிப்பு
Apr 5 2020 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு. நரேந்திர மோதியின் அழைப்பின்படி, இன்றிரவு நடைபெறவுள்ள சுடர் ஏற்றும் நிகழ்வின்போது, அத்தியாவசியத் தேவைக்கான மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோதியின் சுடர் ஏற்றும் நிகழ்வுக்கான அழைப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, வீட்டு தேவைகளுக்கான ஏ.சி, மின்விசிறி, ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களின் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் என்றும், செல்போன்களை முடக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகள், சாலையோர விளக்குகள் போன்ற முக்கிய இடங்களில் மின் விளக்குகள் அணைக்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.