ராமநாதபுரம் மாவட்டத்தில், 11 வயது சிறுவன் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
May 25 2020 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டத்தில், 11 வயது சிறுவன் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 58 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 29 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். இந்த நிலையில் இன்று கீழக்கரையை சேர்ந்த 11 வயது சிறுவன் உட்பட 5 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது.