திருமழிசை சந்தையில் சிறு வியாபாரிகளுக்‍கு கடைகள் ஒதுக்‍கப்படாததால் வீணாகும் காய்கறிகள் - குப்பைகளில் கொட்டப்படுவதோடு பிற இடங்களில் விலை அதிகரிப்புக்கும் காரணமாகி இருப்பதாக வியாபாரிகள் வேதனை

May 28 2020 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருமழிசை காய்கறி சந்தையில் சிறு வியாபாரிகளுக்‍கு கடைகள் ஒதுக்‍கப்படாததால், விற்பனையாகாமல் தேங்கும் காய்கறிகள் வீணாக குப்பையில் கொட்டப்படும் அவலம் தொடர் கதையாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் காய்கறி கிடைக்காமல் அவற்றின் விலை அதிகரித்து காணப்படும் நிலையும் இருந்து வருகிறது.

சென்னையை அடுத்த திருமழிசையில் காய்கறி சந்தை தற்காலிகமாக அமைக்‍கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. இங்கு காய்கறிகள் வரத்து அதிகம் உள்ள போதிலும், அதனை வாங்குவதற்கு வியாபாரிகள், பொதுமக்‍கள் இல்லாததால், கேரட், தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகள் கடந்த சில தினங்களாக வீணாக குப்பையில் கொட்டப்படும் அவலம் நடந்து வருகிறது. இந்த சந்தையில் சிறு வியாபாரிகளுக்கு கடைகளை தமிழக அரசு ஒதுக்‍கித் தரவில்லை என்றும், இதனால் விற்பனையாகாமல் தேங்கும் காய்கறிகள் குப்பையில் கொட்டப்படுவதுடன், சென்னை உள்ளிட்ட இடங்களில் அவற்றின் விலையும் அதிகரித்து காணப்படும் அவலம் நீடிக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00