சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலங்களில், ராயபுரம் தொடர்ந்து முதலிடம் - 2 ஆயிரத்து 446 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு
May 30 2020 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலங்களில், ராயபுரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 2 ஆயிரத்து 446 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 13 ஆயிரத்து 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 60 புள்ளி 09 சதவீத ஆண்களும், 39 புள்ளி 89 சதவீத பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், 6 மண்டலங்களில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 2 ஆயிரத்து 446 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக, கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 678 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க.நகரில் ஆயிரத்து 437 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 500 பேரும், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 425 பேரும், அண்ணாநகரில் ஆயிரத்து 143 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளசரவாக்கத்தில் 816 பேருக்கும், அடையாறில் 745 பேருக்கும், அம்பத்தூரில் 538 பேருக்கும், திருவொற்றியூரில் 414 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவரத்தில் 298 பேரும், சோழிங்கநல்லூரில் 233 பேரும், பெருங்குடியில் 226 பேரும், மணலியில் 190 பேரும், ஆலந்தூரில் 188 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் 6 ஆயிரத்து 300 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 6 ஆயிரத்து 869 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், தற்போது வரை 109 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், வெளிமாநிலத்தை சேர்ந்த 84 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.