தமிழகத்தில் பொது முடக்கத்தை முழுமையாக தளர்த்த முடியாது என முதலமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு மருத்துவ நிபுணர் குழு கருத்து - கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தொடரலாம் என்றும் பரிந்துரை
May 30 2020 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் பொதுமுடக்கத்தை முழுமையாக தளர்த்த முடியாது என்றும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்றும், அரசுக்கு மருத்துவக்குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.
சென்னையில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஐ.சி.எம்.ஆர் மருத்துவக்குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குநர் பிரதீப் கவுர், கொரோனா நோய்த்தடுப்பு தொடர்பாக புதுப்புது கண்டுபிடிப்புகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மக்கள் தொகை அதிகம் கொண்ட சென்னை போன்ற பெருநகரங்களில் நோய் பாதிப்பு அதிகம் இருப்பதாகவும், நாளுக்குநாள் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கையைக் கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறினார். கொரோனாவை தடுக்க முகக்கவசங்களை பொதுமக்கள் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதீப் கவுர் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் பொதுமுடக்கத்தை முழுமையாக தளர்த்த முடியாது என்றும், கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்றும் தெரிவித்தார். பொதுமுடக்கம் காரணமாக நோய் பரவல் கட்டுப்பாடு சிறப்பாக கையாளப்பட்டிருப்பதாகவும் பிரதீப் கவுர் குறிப்பிட்டார்.