காதலித்து திருமணம் செய்த 2 மனைவிகளைக் கொன்ற கணவன் : நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைப்பு
May 30 2020 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்துள்ள அம்பத்தூர் பகுதியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட 2 மனைவிகளை, கணவனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூரை அடுத்த கருக்கு மேனாம்பேடு, மெயின் ரோட்டை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்ற லாரி ஓட்டுநரின் 2வது மனைவி கோகிலா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கோபாலகிருஷ்ணனுக்கு மதுப்பழக்கம் இருப்பதால், தனது மகளை அவர் கொன்றுவிட்டதாக கோகிலாவின் தாயார் தெரிவித்துள்ளார். கோபாலகிருஷ்ணன்-கோகிலாவுக்கு யஷ்வந்த் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரியை கோபாலகிருஷ்ணன் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்ததும், அவர் கேஸ் ஸ்டவ் வெடித்து இறந்ததும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில், கோகிலா மரணம் தொடர்பாக கோபாலகிருஷ்ணனை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.