ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளாக ரூ.1-க்கு இட்லி விற்கும் 70 வயது பாட்டி
May 31 2020 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விலைவாசி உயர்வை பொருட்படுத்தாமல், ராமநாதபுரத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வறுகிறார்.
கமுதியை அடுத்த கீழராமநதி பகுதியை சேர்ந்த 70 வயதான மூதாட்டி வீரமல்லு. கடந்த 30 வருடங்களாக இட்லி வியாபாரம் செய்து வரும் இவர், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். ஹோட்டல்களில் ஒரு இட்லி 10 ரூபாய் வரை விற்பனை ஆகும் நிலையில், இவர் விலைவாசி பற்றி கவலைப்படாமல், அதே ஒரு ரூபாய்க்கு தான் தற்போதும் விற்பனை செய்து வருகிறார். அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில், "ஒரு ரூபாய் இட்லி பாட்டி" என்று அழைக்கும் அளவுக்கு, வீரமல்லு பாட்டி அப்பகுதியில் மிகவும் பிரபலம்.