தலைமை செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஊழியர்கள் வருகை குறைக்க முதலமைச்சருக்கு, தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடிதம்
Jun 2 2020 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில், சுகாதாரம், வருவாய், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட ஒரு சில துறைகள் மட்டுமே குறைவான பணியாளா்களைக் கொண்டு இயங்கி வந்தன. தற்போது ஊரடங்கில் சில தளர்வு அறிவிக்கப்பட்டு, கடந்த 15 நாள்களாக சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியா்களைக் கொண்டு தலைமைச் செயலகம் இயங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தினமும் 2 ஆயிரத்து 500 போ் பணிக்கு வருகின்றனா்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 50 சதவீத பணியாளர்கள் பணியாற்றும் நிலையில், 33 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி முதலலமைச்சருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.