சென்னையில் ராயபுரத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், தண்டையார் பேட்டையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் கொரோனாவால் பாதிப்பு
Jun 3 2020 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரத்தில், 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், தண்டையார் பேட்டையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 16 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 60 புள்ளி 36 சதவீத ஆண்களும், 39 புள்ளி 63 சதவீத பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் 7 ஆயிரத்து 805 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 ஆயிரத்து 506 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், தற்போது வரை 135 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், வெளிமாநிலத்தை சேர்ந்த 139 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 3 ஆயிரத்து 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 2 ஆயிரத்து 7 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 921 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 871 பேரும், திரு.வி.க.நகரில் ஆயிரத்து 711 பேரும், அண்ணாநகரில் ஆயிரத்து 411 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடையாறில் 949 பேருக்கும், வளசரவாக்கத்தில் 910 பேருக்கும், அம்பத்தூரில் 619 பேருக்கும், திருவொற்றியூரில் 559 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவரத்தில் 400 பேரும், சோழிங்கநல்லூரில் 279 பேரும், பெருங்குடியில் 278 பேரும், ஆலந்தூரில் 243 பேரும், மணலியில் 228 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.