மாநிலம் முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் - பள்ளிக் கல்வித் துறை தகவல்
Jun 3 2020 3:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
10ம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் 15ம்தேதிமுதல் 25ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், 12 ஆயிரத்து 690 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறப்புத் தேர்வு மையங்கள் அமைக்க நடுநிலைப்பள்ளிகளை அடையாளம் காணும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.