சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் தமிழகத்தில் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Jun 3 2020 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் தமிழகத்தில் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, மஹாராஷ்டிர மாநிலம் சங்லி மாவட்டத்தில் உள்ள குப்வாட் கிராமத்தில் சிக்கியுள்ள கணேசன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் திரு.சூரியபிரகாசம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய உணவு வழங்கப்படவில்லை என்றும், அடிப்படை வசதிகள் இல்லாமல் ரயில் நிலையங்களில் தவித்து வருவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்ட நீதிபதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்யும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். முன்னதாக, இந்த வழக்கில் அறிக்கை அளிக்க மத்திய-மாநில அரசுகள் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.