அரியலூரில் மானாவாரி சாகுபடி பயிர்களுக்கு அரசு நேரடி கொள்முதல் செய்யவேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
Jun 3 2020 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டம் செந்துறையில் மானாவாரி சாகுபடிக்கு மக்காச்சோளம் மற்றும் பருத்தி அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு மானாவாரி மற்றும் கிணற்றுப்பாசனம் மூலம் அதிக அளவில் எள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு எள் சாகுபடி அதிகரித்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்த எள்ளினை இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் வெளியூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு ஒவ்வொரு பகுதியிலும் நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.