அரியலூர் நக்கம்பாடி கிராமத்தில் மீன்பிடித் திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பதட்டம்
Jun 3 2020 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டம் நக்கம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வருடமும் மீன்பிடி திருவிழாவை நடத்த கிராம முக்கியஸ்தர்கள் முடிவுசெய்து மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் செந்துறை, சொக்கநாதபுரம், வஞ்சினாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர். சமூக இடைவெளி இல்லாமல் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டதால், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குவிந்திருந்த பொதுமக்களை கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தினர். இதனால் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.