திட்டமிடப்படாத தொடர் ஊரடங்கால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பெரிதும் பாதிப்பு
Jun 3 2020 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திட்டமிடப்படாத தொடர் ஊரடங்கால், இந்தியாவின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அகில இந்திய உற்பத்தியாளர் சங்கம், இதர 9 தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின்படி, 35 சதவீத சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் 37 சதவீத சுயதொழில் புரிவோர், திரும்ப மீள முடியாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 32 சதவீத சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், தங்களின் பழைய நிலையை அடைய, குறைந்தபட்சம் இன்னும் 6 மாதங்கள் வரை ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.