செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 73 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 1,610-ஆக உயர்வு
Jun 5 2020 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 73 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், பம்மல், பரங்கிமலை, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு பணிபுரியச் சென்ற 35 பேர் மற்றும் செங்கல்பட்டில் அமைந்துள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் என 73 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 610ஆக உயர்ந்துள்ளது. 710 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.