பந்திபூர் புலிகள் சரணாலயத்தில் கர்ஜனையுடன் நடந்து சென்ற புலி - சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவும் வீடியோ காட்சிகள்
Jul 7 2020 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலம் பந்திபூர் புலிகள் காப்பகத்தில் ஒரு புலி பெரும் கர்ஜனையுடன் நடந்துசென்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கர்நாடக மாநில எல்லையை யொட்டி பந்திபூர் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு அரியபல விலங்குகள் காணப்படும் நிலையில், புலிகளின் வாழ்விடமாகவும் இது இருந்த வருகிறது. எனினும் அவற்றைக் காண்பது அரிதான நிகழ்வாகவே உள்ளது.
இந்தநிலையில், பந்திபூர் சரணாலய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு புலி பெரும் கர்ஜனையுடன் கம்பீரமாக நடந்து சென்றதை வனத்துறையினர் தங்கள் வீடியோ கேமராவில் பதிவு செய்தனர். இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.