தஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்
Jul 9 2020 6:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம் கவாஸ்கார தெருவில், ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை, அப்பகுதி இளைஞர்கள் தூர்வாரினர். குளம் முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடந்ததை அடுத்து, அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்தினர். மேலும், கல்லணை கால்வாய் புது ஆற்றில் இருந்து, குடியிருப்புகளின் தெரு வழியாக, குழாய் மூலம் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளனர். இளைஞர்களின் இந்த முயற்சியை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.