சென்னையில் குறைந்து வருகிறது பாதிப்பு : கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு
Jul 10 2020 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதம் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் இம்மாதம் 5ம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில், கொரோனா தீவிரம் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தினமும் 2 ஆயிரத்தை கடந்து காணப்பட்ட பாதிப்பு தற்போது ஆயிரத்து 200 முதல் ஆயிரத்து 500 ஆக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், கட்டுப்பாட்டு மண்டலங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உளளது.