சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 25 பேர் பலி - அரசு மருத்துவமனைகளில் 18 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழப்பு
Jul 10 2020 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு மேலும் 25 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னையில் கொரோனாவிற்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் காலை 9 மணி நிலவரப்படி, 25 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 8 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.