கொரோனா ஊரடங்கு மீறல் : தமிழகம் முழுவதும் ரூ.17. 84 கோடி அபராதம் வசூல்
Jul 12 2020 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 17 கோடியே 84 லட்சத்து 47 ஆயிரத்து 876 ரூபாய் அபராதமாக சூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 107 நாட்களில் தடையை மீறியதாக 8 லட்சத்து 41 ஆயிரத்து 230 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஊரடங்கை மீறியதாக 7 லட்சத்து 66 ஆயிரத்து 717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 6 லட்சத்து 30 ஆயிரத்து 662 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதமாக 17 கோடியே 84 லட்சத்து 47 ஆயிரத்து 876 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.