கொரோனா தடுப்புப்பணிகள் போன்ற பேரிடர் காலங்களில் ஆசிரியர்கள் மற்றவர்களுக்‍கு முன்னுதாரணமாக இருக்‍க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

Jul 13 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தடுப்புப்பணிகள் போன்ற பேரிடர் காலங்களில் ஆசிரியர்கள் மற்றவர்களுக்‍கு முன்னுதாரணமாக இருக்‍க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, தொற்று பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கு சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவது என முடிவு செய்து, உத்தரவும் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர்கள் இயற்கையாகவே தலைமை பொறுப்பு கொண்டவர்கள் - இது போன்ற பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். இதுபோன்ற பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00