தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்யப்படவில்லை - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
Jul 13 2020 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். தேதி முடிவு செய்யப்படவில்லை என்றாலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக இருப்பதாக கூறினார்.