திருவாரூரில் அரசு நிகழ்ச்சியை கட்சி மேடையாக்கிய அமைச்சர் : சட்ட ரீதியாக வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் முடிவு
Aug 9 2020 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், அமைச்சர் காமராஜ் அரசியல் பேசி கட்சி மேடையாக்கியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இதுகுறித்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட உயர் அதிகாரிகள், அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதற்காக அமைக்கப்பட்ட மேடையில் செய்தியாளர் சந்திப்பு என்ற பெயரில் அமைச்சர் காமராஜ், அ.தி.மு.க - பா.ஜ.க அரசியல் குறித்து பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இதுகுறித்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.