தமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.20.6 கோடி அபராதம் வசூலிப்பு
Aug 10 2020 2:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 53 ஆயிரத்து 914 பேரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 138 நாட்களில் தமிழக காவல்துறையின் தடையை மீறியதாக 6 லட்சத்து 73 ஆயிரத்து 806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கை மீறியதாக 8 லட்சத்து 65 ஆயிரத்து 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 20 கோடியே 6 லட்சத்து 25 ஆயிரத்து 243 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.