பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது - அனைத்து வகுப்புகளிலும் பங்கேற்று தேர்வுக்கு தயாராகுமாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்
Aug 12 2020 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின. மாநிலம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்று தொடங்கின.வரும் அக்டோபர் 26-ம் தேதி வரை, வாரத்தில் 6 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறவுள்ளன. மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 28-ம் தேதியும், செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 9-ம் தேதியும் தொடங்க உள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொண்டு தேர்வுக்கு தயாராக வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.