மதுரை, உசிலம்பட்டி கண்மாயில் கோழிக்கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை தேவை
Aug 14 2020 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, வாலாந்தூரில் உள்ள நீர்ப்பிடிப்பு கண்மாயில் கோழிக்கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கண்மாய் முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கோழிக்கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.