திருவாரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
Aug 15 2020 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து கோழி ஏற்றி வந்த மினி லாரி, மன்னார்குடி அருகே காளவாய்கரை என்ற இடத்தில் ஜல்லி கற்களுடன் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த கூலி தொழிலாளர்களான வெங்கடேசன், கந்தன் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் நான்கு பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கோழி ஏற்றி வந்த மினி லாரி ஓட்டுனர் உயிர் தப்பினார். முதற்கட்ட விசாரணையில் தாராபுரத்திலிருந்து நான்கு பேரும் லிப்ட் கேட்டு திருத்துறை பூண்டிக்கு செல்லும் வழியில் விபத்துக்கு ஆளானதாக தெரியவந்துள்ளது. மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.