நீட் பற்றி கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை - நீதிபதி சுப்பிரமணியத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாகி தலைமையிலான அமர்வு

Sep 18 2020 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீட் தேர்வு குறித்து பேசிய நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் 3 மாணாக்‍கர்கள் உயிரிழந்த நிலையில், நடிகர் சூர்யா இதுகுறித்து வெளியிட்ட அறிக்‍கையில், முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்து இருக்கிறார்கள் என குற்றம்சாட்டியிருந்தார். நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது என அவர் குற்றம் சாட்டியிருந்தார். கொரோனா அச்சுறுத்தலால், உயிருக்கு பயந்து காணொளி காட்சி மூலம் வழக்குகளை நடத்துகின்ற நீதிமன்றங்கள் கூட, இந்த அசாதாரண சூழலில் மாணவர்களை பயப்படாமல் தேர்வெழுத போகச் சொல்கிறது என நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கருத்து தொடர்பாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், தனி நீதிபதி திரு. சுப்ரமணியம் அளித்த புகார் அடிப்படையில் தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00