ஆத்தூரில் சுகாதாரத்துறையினர் ஏழு இடங்களில் காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைத்து பரிசோதனை
Sep 21 2020 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் ஏழு இடங்களில் காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைத்து 100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பேருந்து நிலையம், கல்லநத்தம், நரசிங்கபுரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைத்து பொதுமக்களை பரிசோதனை செய்து வருகின்றனர். இதில் பேருந்து பயணிகள், கடைக்காரர்கள் உள்பட ஏராளமானோர் பரிசோதனை மேற்கொண்டனர்.