கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு - ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து, வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக உயர்வு
Sep 21 2020 7:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 45 ஆயிரத்து 668 கன அடியிலிருந்து 72 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 72 ஆயிரத்து 92 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.