தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று - சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
Sep 24 2020 6:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தே.மு.தி.க., தலைவர் திரு. விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க., தலைவர் திரு. விஜயகாந்த், பெரியளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று இரவு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.