தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்தது - 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 325 பேருக்கு பெருந்தொற்று
Sep 24 2020 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், மேலும் 5 ஆயிரத்து 325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்தது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 325 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக, தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999-ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில், கொரோனா வைரஸ் காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 10-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 980 பேர், வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 594 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 363 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 2 ஆயிரத்து 740 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் 587 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 298 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 297 பேருக்கும், திருப்பூரில் 247 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 218 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 205 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.